17ஐ கடத்திய 15க்கு வலை

Started by aruljothi, Jul 04, 2009, 09:41 PM

Previous topic - Next topic

aruljothi

திருநெல்வேலி: பதினேழு வயது பள்ளி மாணவியை கடத்திச்சென்றதாக, 15 வயது மாணவர் மீது போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே, சின்னக்கோவிலான்குளத்தை சேர்ந்த துரைப்பாண்டி மகள் கவிதா(17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் சங்கரன்கோவில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயில்கிறார். அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் அழகுதுரை(15). வடமலாபுரத்தில் உ<ள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். கவிதா, அழகுதுரையை விட வயதில் மூத்தவர். மேலும், அக்காள் முறை என கூறப்படுகிறது; இருவரும் நட்பாக பழகியுள்ளனர். இதை கண்டித்த கவிதாவின் பெற்றோர், அவரை தாத்தா வீட்டிற்கு அனுப்பி அங்கிருந்து பள்ளிக்கு வரச் செய்தனர். இந்நிலையில், அழகுதுரை, கவிதாவை எங்கோ அழைத்துச் சென்றுவிட்டதாக, கவிதாவின் தந்தை சின்னக்கோவிலான்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அழகுதுரை மீது கடத்தல் வழக்கு பதிவு செய்து, தேடிவருகின்றனர்.