இலங்கை: 89 வீரர்கள் பலி - இலங்கை ராணுவம் மறுப்

Started by sajiv, Dec 11, 2008, 11:39 PM

Previous topic - Next topic

sajiv


கொழும்பு : ராணுவத்தினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கையில்  விடுதலைப்புலிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் சிங்கள வீரர்கள் 89 பேர் கொல்லப்பட்டனர் என்று விடுதலைப்புலிகள் ஆதரவு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இலங்கை ராணுவம் இதனை மறுத்துள்ளது. தங்களது தரப்பில் கடந்த 2 நாட்களில் 20 பேர் மட்டுமே பலியானதாகவும், புலிகள் தரப்பில் 27 பேர் கொல்லப்பட்ட தாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையதளமான தமிழ்நெட் வெளியிட்டுள்ள செய்தியில், புலிகளின் தலைநகரமான கிளிநொச்சி அருகே நேற்று இருதரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்த மோதலின் போது கிளிநொச்சியின் மேற்கே ராணுவ வீரர்கள் 60 பேர் கொல்லப்பட்ட தாகவும், கிளிநொச்சியின் தெற்கே நடைபெற்ற கடும் மோதல்களில் மேலும் 29 பேர் கொல்லப்பட்ட தாகவும் விடுதலைப்புலிகளின் தலைவர்களை மேற்கோள்காட்டி அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை மறுத்துள்ள ராணுவ செய்தித்தொடர்பாளர் உதய நாணயக்காரா புலிகளின் இந்த தகவல் விளம்பர ஆதாயம் தேடும் முயற்சி என்று தெரிவித்துள்ளார்.