திட்டமிட்ட சதி நடக்கிறது: நடிகர் அகுஜா பு

Started by aruljothi, Jul 06, 2009, 12:55 PM

Previous topic - Next topic

aruljothi

மும்பை: "வீட்டு வேலைக்கார பெண்ணை கற்பழிக்கவில்லை. என்னை வழக்கில் சிக்க வைப்பதற்கு திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது' என, பிரபல பாலிவுட் நடிகர் ஷினே அகுஜா, தனது ஜாமீன் மனுவில் தெரிவித்துள்ளதாக அவரது வக்கீல் ஸ்ரீகாந்த் சிவதே கூறியுள்ளார். மும்பையைச் சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் ஷினே அகுஜா.


இவர், தனது வீட்டு வேலைக்கார பெண்ணை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டுள் ளார். இவரது கோர்ட் காவல், வரும் 16ம் தேதி வரை நீட்டிக்கப் பட் டுள்ளது. இதற்கிடையே, ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது. ஜாமீன் மனுவில் இடம் பெற்றுள்ள விவரங்கள் குறித்து அகுஜாவின் வக்கீல் ஸ்ரீகாந்த் சிவதே கூறியதாவது: அகுஜா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வீட்டு வேலைக்கார பெண் ணை, தான் கற்பழிக்கவில்லை என்றும், கற் பழிக்கப்பட்டதாக கூறப் படும் பெண்ணின் உடலில் அதற்கான புறக்காயங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். அப்படியே அப்பெண் கற்பழிக்கப்பட்டதாக அரசு தரப்பில் வக்கீல் கூறுவதாக வைத்துக் கொண் டாலும், இணங்கி நடந்த செயலாக இருக்க வேண் டும். ஏனெனில் அப் பெண்ணுக்கு புறக்காயம் ஏதும் ஏற்படவில்லை .தான் கவுரவமான குடும் பத்தைச் சேர்ந்தவன் என்றும், வழக்கில் சிக்க வைப்பதற்காக எனக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது என் றும் தனது மனுவில் கூறியுள்ளார். இவ்வாறு ஸ்ரீகாந்த் சிவதே கூறினார்.