மே 6ம் தேதி முதல் என்ஜினியரிங் விண்ணப்பங்

Started by rajoe, Apr 29, 2009, 12:42 PM

Previous topic - Next topic

rajoe

மே 6ம் தேதி முதல் என்ஜினியரிங் விண்ணப்பங்கள்

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 6ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன. இத் தகவலை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும். இதற்கான விண்ணப்பங்கள் மே 6ம் தேதி முதல் வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் 58 மையங்களில் இந்த விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு கட்டணம் ரூ. 250.

விண்ணப்பங்களுடன் 450 பக்கங்கள் கொண்ட பொறியியல் கல்லூரிகள் பற்றிய விவரக் குறிப்பும் வழங்கப்படும். இந்த விண்ணப்பங்களை ஆன்-லைனிலும் டெளன்லோட் செய்து விண்ணப்பிக்கலாம்.

மே 31ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஜூன் 20ம் தேதிக்குள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் முடிந்த பின், பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கும் என்றார்.

மருத்துவ விண்ணப்பங்கள் வினியோகம் எப்போது?:

இதற்கிடையே மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே மூன்றாவது வாரத்தில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

source:thatstamil