மெட்ரிக் தேர்வுகள் இன்று துவக்கம்

Started by rajoe, Mar 18, 2009, 10:24 AM

Previous topic - Next topic

rajoe

    மெட்ரிக் தேர்வுகள் இன்று துவக்கம்


மெட்ரிக் - ஆங்கிலோ இந்தியன் பொதுத் தேர்வுகள் இன்று துவங்குகின்றன. ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 484 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,128 மெட்ரிக் பள்ளிகளில் இருந்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 787 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். இவர்களில், 64 ஆயிரத்து 734 பேர் மாணவர்கள்; 52 ஆயிரத்து 53 பேர் மாணவிகள். கடந்த ஆண்டைவிட 10 ஆயிரத்து 864 மாணவர்கள் கூடுதலாக எழுதுகின்றனர். இவர்களில், மாணவர்கள் 6,399 பேர்; மாணவிகள் 4,465 பேர். தேர்வை கண்காணிப்பதற்கு, தேர்வுத்துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., தேர்வுகள் 25ம் தேதி முதல் நடைபெறுகின்றன. இந்தத் தேர்வை எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர். அனைத்து தேர்வுகளும், ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகின்றன.

source:dinamalar