127 ஆவது ‌பிற‌ந்தநா‌ள் : பார‌தியாருக்கு மலரஞ&

Started by dhilipkumar, Dec 11, 2008, 09:09 PM

Previous topic - Next topic

dhilipkumar

127 ஆவது ‌பிற‌ந்தநா‌ள் : பார‌தியாருக்கு மலரஞ்சலி
சென்னை (ஏஜென்சி), வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2008   ( 16:01 IST )
மகாக‌வி பார‌தியா‌ரி‌ன் 127வது ‌பிற‌ந்தநாளை மு‌ன்‌னி‌ட்டு அவரது ‌திருவுருவ‌ப்பட‌த்‌தி‌ற்கு தமிழக அரசு சார்பில் அமை‌ச்‌ச‌ர்க‌ள் மாலை அ‌‌ணி‌‌வி‌த்து ம‌ரியாதை செலு‌த்‌தின‌ர்.

செ‌ன்னை மெ‌‌ரீனா கட‌ற்கரை காமராஜ‌ர் சாலை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ள பார‌தியா‌ரி‌ன் ‌திருவுருவ ‌கிரு‌ஷ்ணரா‌வ் ஆ‌கியோ‌ர் மல‌ர் தூ‌வி ம‌ரியாதை செலு‌த்‌தின‌ர் இரா.ஆவுடைய‌ப்ப‌ன், செ‌ய்‌தி‌த்துறை அமை‌ச்ச‌ர் ப‌ரி‌தி இள‌‌ம்வழு‌தி,சமூக நல‌த்துறை   அமை‌ச்ச‌ர் கீதா ‌ஜீவ‌ன், கத‌ர்துறை அமை‌ச்ச‌ர் கா.இராம‌ச்ச‌ந்‌திர‌ன், ம‌யிலா‌ப்பூ‌ர் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் எ‌ஸ்.‌வி.சேக‌ர், செ‌‌ய்‌தி ம‌க்க‌ள் தொட‌ர்‌பு‌த்துறை இய‌க்குன‌ர் ஆ‌ர்.‌சி.மோக‌ன் உள்ளிட்ட பலர் மல‌ர் தூ‌வி ம‌‌‌‌ரியாதை செலு‌த்‌தின‌ர்.

இதேபோல மாநிலம் முழுவதும் மகா கவியின் திருவுருவ படத்திற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனிடையே புது‌ச்சே‌ரி‌யி‌லும் பாரதியாரின் 127 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

பார‌தி பூ‌ங்கா‌வி‌ல் அமை‌‌‌ந்து‌ள்ள மகாக‌வி பார‌தியா‌ரி‌ன் ‌திருவுருவ ‌சிலை‌க்கு அமை‌ச்ச‌ர்க‌ள் வ‌ல்சரா‌ஜ், ஷாஜகா‌ன், ம‌ல்லாடி ‌கிரு‌ஷ்ணரா‌வ் ஆ‌கியோ‌ர் மல‌ர் தூ‌வி ம‌ரியாதை செலு‌த்‌தின‌ர்.

த‌மி‌ழ்ச் ச‌ங்க‌ம் சா‌ர்‌பி‌ல் நட‌ந்த ‌விழா‌வி‌ல் புது‌ச்சே‌ரி ‌கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் சு‌ப்‌பிரம‌ணிய‌ன், த‌மி‌ழ்நாடு கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் மு‌ன்னா‌ள் தலைவ‌ர் கும‌ரி அ‌ன‌ந்த‌ன் ம‌ற்று‌ம் த‌மி‌ழ்‌ச் ச‌ங்க உறு‌ப்‌பின‌ர்க‌ள் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

இதேபோன்று மேலும் பல இடங்களிலும் பாரதியாரின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.