மும்பை தாக்குதல்: சென்னையில் பாதுகாப்பு Ħ

Started by Kalyan, Nov 27, 2008, 02:17 PM

Previous topic - Next topic

Kalyan

மும்பை தாக்குதல்: சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு

மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நட்சத்திர ஓட்டல் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் விமான நிலையம், ரயில் நிலையம் உட்பட முக்கிய இடங்களில் நவ-26 அன்று இரவு தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.  மும்பையில் எட்டு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் 78 பேர் பலியாகியுள்ளனர். 200-க்கும் மேற்பட்டோ ர் காயமடைந்தனர். போலீஸுக்கு உதவ ராணுவமும், தேசிய பாதுகாப்பு படையும் விரைந்தள்ளது.

துப்பாக்கிச் சூட்டில், ஏ.கே.47 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக மும்பை போலீசார் கூறினர். மும்பையில் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.  முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் விமான நிலையம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோயில்கள் உட்பட சென்னையில் பொது மக்கள் கூடும் அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிரகண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதுடன், காவல் துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

source : chennaionline