தியாகராயர் நகரில் நெரிசல் அபாயம்!!!

Started by Kalyan, Oct 24, 2008, 01:21 AM

Previous topic - Next topic

Kalyan

தியாகராயர் நகரில் நெரிசல் அபாயம்!!!

தீபாவளி பண்டிகைக்காக ஆடை, ஆபரணங்களை வாங்க சென்னை தியாகராயர் நகருக்கு வரும் மக்கள், அங்குள்ள கடைகளில் பொருட்களை வாங்கச் செல்லும் மக்கள் கூட்டத்தினால், அந்தக் கடைகளுக்குள்ளேயே நெரிசல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

உஸ்மான் சாலை, இரங்கநாதன் வீதி ஆகியவற்றில் உள்ள ஜவுளிக் கடைகளில் கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் கூடிய கூட்டம் ஒரு அபாய அறிவிப்பாகவே இருந்தது.

போத்திஸ், சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், குமரன் ஸ்டோர்ஸ் என்று எல்லா பெரும் ஜவுளிக் கடைகளும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. இக்கடைகளின் வாயில் பெரிதாக இருந்தும் மக்கள் வரவு பெருமளவிற்கு அதிகரித்ததால், அங்குள்ள ஊழியர்கள் முறைப்படுத்த திணறியதைக் கண்டோம்.

இக்கடைகளின் ஒவ்வொரு தளத்திலும் சேரும் மக்கள் கூட்டம், மிக மிக நெருக்கமாக ஒருவரையொருவர் உரசிக்கொண்டும், தள்ளிக்கொண்டும் தங்களுக்குத் தேவையான பொருட்களைத் தேடி எடுக்க முண்டுவதும், பொருட்களை வாங்கியவர்கள் பணத்தைச் செலுத்த முண்டியடித்துக்கொண்டு முன்னேறுவதும் பார்ப்பதற்கே அச்சுறுத்தலாக இருந்தது.