News:

GinGly.com - Used by 85,000 Members - SMS Backed up 7,35,000 - Contacts Stored  28,850 !!

Main Menu
Menu

Show posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.

Show posts Menu

Topics - rajoe

#2
Chat Box / Happy New Year 2011
Dec 31, 2010, 04:21 PM
Wish u happy New Year 2011
[smg id=7709 type=full]
#3
Hi,

Can anyone solve my problem in gingly

my mobile model is :  nokia 5310 XP

[smg id=7676 type=full]
#5
[smg id=7555 type=full]
சென்னை: இந்திய ரூபாய்க்கான சின்னத்தை உருவாக்கிய உதயக்குமார் சென்னையைச் சேர்ந்த தமிழர் ஆவார்.

டாலர், யூரோ, யென் போன்றவற்றுக்கு தனி அடையாளச் சின்னம் உள்ளது. அந்த மதிப்பு மிகுந்த நாணய வரிசையில் தற்போது இந்திய ரூபாயும் சேருகிறது. இந்திய ரூபாய்க்கான தனி சின்னத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

மும்பை ஐஐடியில் படித்தவரான உதயக்குமார் என்பவர்தான் இதற்கான சின்னத்தை வடிவமைத்துள்ளார்.

தண்டையார்பேட்டையில் வசித்து வரும் உதயக்குமார் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை தர்மலிங்கம் முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். தாயார் பெயர் ஜெயலட்சுமி. சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மரூர் ஆகும்.

உதயகுமாருக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஓவியத்துக்காக பல பரிசுகள் பெற்று உள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள லீ சாட்லியர் உறைவிட ஜுனியர் கல்லூரியில் பிளஸ்-2 வரை படித்த உதயகுமார், பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பி.ஆர்க் பட்டம் பெற்றார். பி.ஆர்க் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்வு பெற்றார்.

அதன்பிறகு மும்பை ஐ.ஐ.டி.யில் தொழில் டிசைனிங் பிரிவில் (விஷுவல் கம்யூனிகேஷன்) முதுகலை பட்டம் பெற்றார். அங்கு பி.எச்டி. ஆய்வையும் முடித்து பட்டம் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில், தான் வடிவமைத்த அடையாள குறியீட்டை அனுப்பி வைத்தார். கடும் போட்டிக்கு மத்தியில் உதயக்குமாரின் டிசைன் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டிசைனைத்தான் நேற்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. அடுத்து உலகம் முழுவதும் இது பரவப் போகிறது.

இந்த பெரும் கெளரவம் குறித்து உதயக்குமார் கூறுகையில், என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. உண்மையில் மெய்சிலிர்த்து போய் இருக்கிறேன்.

ரூபாய்க்கான அடையாள குறியீட்டை இந்திய எழுத்தில் வடிவமைத்து இருந்தேன். போட்டியில் நான் வெற்றி பெற இதுவே காரணம் என்று நினைக்கிறேன் என்றார்.

உதயக்குமார் குவஹாத்தி ஐஐடியில் உதவிப் பேராசிரியராக இன்று பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#6
Chat Box / Amazing Accident
Jul 12, 2010, 11:08 AM
How God safes His people




[smg id=7552 type=full]
#7
It's tentacle trauma in Oberhausen. Paul the prescient octopus predicted Tuesday that Spain will sink Germany in the World Cup. (July 06)


Octopus Oracle Shows Germany the Red Card
#8
[smg id=7545 type=full]

லண்டன்: ஐரோப்பிய விண்வெளி ஆராச்சி மையத்தின் பிளாங்க் கனல்சா என்ற செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள தொலைநோக்கி, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஒரே புகைப்படமாக எடுத்துள்ளது.

ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒரே புகைப்படமாக நமக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த புகைப்படத்தின் மூலம் பிரபஞ்சம், நடத்திரங்கள், கோள்கள், தாதுக்கள், உயிர்கள் உருவானது குறித்த ஆய்வுகள் மேலும் மேம்படும் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 'பிங் பேங்' எனப்படும் பேரண்ட வெடிப்புக்குப் பின்னர் பிரபஞ்சம் உருவானது.

அப்போது உருவான ஒளியி்ன் மிச்சத்தையும் இந்த செயற்கைக் கோள் படம்  பிடித்துள்ளது. இந்தப் படத்தின் நடுப் பகுதியில் காணப்படும் வெள்ளை நிற ஒளிக் கோடு நமது சூரிய குடும்பம் அடங்கிய பால்வெளி மண்டலத்தில் (Milky Way galaxy) இருந்து வெளியாகும் கதிர்வீச்சாகும்.

படத்தின் இரு ஓரங்களிலும் காணப்படும் ஒளி, 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பேரண்ட வெடிப்பில்போது உருவான முதல் ஒளியின் மிச்சமாகும்.

இந்தப் படம் நமக்குக் காட்டுவது பிங்-பேங் வெடிப்பைத் தொடர்ந்து பரவிய தூசி, வாயு மண்டலங்களின் கதிர்வீச்சு தான். இந்தக் கதிர்வீ்ச்சைத் தான் பிளாங்க் செயற்கைக் கோளில் உள்ள மைக்ரோவேவ் தொலைநோக்கி தனது இன்ப்ரா-ரெட் (Infra red) லென்ஸ் மூலம் படம் பிடித்துள்ளது.

இந்த முழுப் படமும் இன்ப்ரா ரெட் கதி்ர்வீச்சை 9 அலைவரிசைகளாகப் படம்பிடித்து ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதாகும்.

கடந்த ஆண்டு ஏவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி கழகத்தின் செயற்கைக்கோள் நேற்று இந்தப் படத்தை எடுத்தது.

இந்தப் புகைப்படம் குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமத்தின் அறிவியல், ரோபோட்டிக் பிரிவு இயக்குநர்  டேவிட் செளத்உட் கூறுகையில், இந்தப் படம் நமது பிரபஞ்சம் குறித்தும், அது உருவான விதம், நட்சத்திரக் கூட்டங்களின் பிறப்பு, பிங் பேங் விட்டுச்சென்ற வெப்பத்தின் அளவு உள்ளிட்டவற்றை கணிக்க உதவும் என்றார்.

விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள பிளாங்க் செயற்கைக்கோள் 2012ம் ஆண்டு வரை செயல்படும். அதற்குள் பிரபஞ்சத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து இதேபோன்ற மேலும் நான்கு புகைப்படங்களை அது அனுப்பவுள்ளது.
#9
அனிமேஷன் படமாக எடுக்கப்பட்டு வந்த ரஜினிகாந்த் தின் சுல்தானை முழு நீள ரஜினி  படமாக மாற்றியுள்ளனராம். இதனால் பட்ஜெட்டும் பல கோடிகள் கூடியுள்ளதாம்.

செளந்தர்யா ரஜினிகாந்த் தனது ஆக்கர் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரித்து வரும் அனி்மேஷன் படம் சுல்தான். இப்படத்தை முழு நீள அனிமேஷன் படமாக எடுத்து வந்தார் செளந்தர்யா.

ஆனால் படம் முடிவடைவதாக தெரியவில்லை. இடையில் பல சிரமங்கள். இந்த நிலையில் தற்போது இப்படத்தை முழுமையான ரஜினி படமாக எடுக்கவுள்ளார் செளந்தர்யா. இன்னொரு விஷயம், படத்தை முழுமையாக ரஜினிகாந்த்தே டேக் ஓவர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் இப்படம் முழுமையான ரஜினி படமாக மாறுகிறது. அதாவது அனிமேஷன் படமாக இது இருக்காது. மாறாக வழக்கமான, பிரமாண்டமான ரஜினி படமாக இது இருக்கும். படத்தின் இடை இடையே அனிமேஷன் காட்சிகள் வருவது போல மாற்றவுள்ளனராம்.

மேலும் படத்தின் பட்ஜெட்டும் பல கோடிகள் கூடியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த்தின் மிகப் பிரமாண்டமான படங்களில் ஒன்றாக சுல்தான் மாறவுள்ளது.

எந்திரன் தொடர்பான வேலைகள் முழுமையாக முடிந்த பின்னர் சுல்தானுக்கு முழு வீச்சில் நேரம் கொடுக்கவுள்ளாராம் ரஜினி.
#10
Chat Box / Support BHARAT BANDH ON 5 JULY
Jul 03, 2010, 05:51 PM
Petrol price in

Pakistan Rs. 26
Bangladesh Rs. 22
Cuba Rs.19
Nepal Rs. 34
Burma Rs. 30
Afganisthan Rs. 36
Qutar Rs. 30

INDIA Rs. 53
BASIC COST  PER 1 LITRE 16.50
Centre tax 11.80%
Excise duty 9.75%
Vate ces 4%
State tax 8 %


Total Rs. 50.05

Now extra 3 Rs, PER 1 LITRE

[color=]Great job from govt. ...[/color]
Pass this messages to ALL INDIANS.....................
PLEASE CHANGE THE CENTRAL GOVERNMENT ..............................
Support BHARAT BANDH ON 5TH  JULY
#11
ஆஸ்கர் விருது களைத் தேர்வு செய்யும் கமிட்டியில் நடுவர்களாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியர்களுக்குப் பெருமளவில் ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் கொடுத்த படம்  ஸ்லம்டாக் மில்லியனர். இப்படத்துக்காக ரஹ்மான் இரண்டு விருதுகளைப் பெற்றார். ரசூல் பூக்குட்டி, பாடலாசிரியர் குல்சார் ஆகியோருக்கு தலா ஒரு விருது கிடைத்தது.

இந்த நிலையில் விருத்துக்கான படங்களைப் பரிசீலிக்கும் ஆஸ்கர் கமிட்டியில் ரஹ்மானும், பூக்குட்டியும் சேர்க்கப்பட்டுள்ளனர். படங்களைப் பார்த்து மதிப்பிட்டு மார்க் கொடுக்கும் பணி இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் போல ஏராளமான பேர் இக்கமிட்டியில் இடம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், மிகப் பெரிய பணி. இதை எதிர்பார்க்கவில்லை. சிறப்பாக செய்ய வேண்டும் என கருதுகிறேன் என்றார்.
#13
Chat Box / Future India!!!!
Jun 26, 2010, 11:53 PM
[smg id=7535 type=full]
#15
சென்னை சென்னை அருகே உள்ள விஜிபி கோல்டன் பீச் தீம் பார்க்கில் ராட்சத ராட்டினம் கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் படு காயமடைந்துள்ளனர்.

சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் விஜிபி கோல்டன் பீச் பொழுது போக்குப் பூங்கா உள்ளது. இங்கு 15 நாட்களுக்கு முன்பு புதிதாக ராட்சத ராட்டினம் அமைக்கப்பட்டது.

இந்த ராட்டினம் இன்று செயல்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து விழுந்தது. இதில் 3 பேர் சிக்கி படுகாயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவர்களை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து விசாரிக்க போலீஸார் விரைந்துள்ளனர். அதிகாரிகளும் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
#17
[smg id=7486]

சென்னை : தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சென்னை தீவுத்திடலில் ஒரு செயற்கை தாஜ்மகால் உருவாக்கப்பட்டிருக்கிறது. கவிஞர் வைரமுத்து தலைமையில் அந்த தாஜ்மகாலில் ஒரு காதல் கவியரங்கம் சமீபத்தில் நடந்தது. தமிழக அரசின் சுற்றுலாத் துறைதான் அதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

தாஜ்மகால் மேடையில் கவிஞர் வைரமுத்து அமர்ந்திருக்க, காதல் கவியரங்கம் தொடங்கியது.

இந்த நிகழ்வுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. பெரும்பாலும் இளைஞர்கள். அதில் ஒரே ஒரு முதியவர் மட்டும் வித்தியாசமாக தெரிந்தார். தள்ளாத வயது, நரைத்த தலை, கூரிய பார்வை. கவியரங்கத்தின் மீதே கண்ணும் காதும் வைத்து லயித்து இருந்தார்.

வைரமுத்துவின் கவிதை வரிகள் மழையாய் விழுந்தன. வரிக்கு வரி கூட்டம் கைத்தட்ட, அந்த வயதான முதியவர் மட்டும் அடிக்கடி தலையாட்டினார். தாடியை தடவியடி சிரித்துக்கொண்டார்.

"இதுதான் காதலுக்கு சிந்தப்பட்ட உயரமான கண்ணீர்த்துளி" என்ற வரியையும், "கண்மணியை உள்ளே புதைத்துவிட்டு வெள்ளை விழி மட்டும் வெளியே தெரிகிறது" என்ற வரியையும் ஆரவாரத்தோடு சபை ரசித்தபோது, அவரும் ரசித்தார்.

"யமுனையை விட கூவம் தாஜ்மகாலே கொடுத்து வைத்தது...
யமுனை வற்றிவிடும்...கூவம் வற்றாது"

-என்று வைரமுத்து கவிதை சொன்னபோது எழுந்த சிரிப்பின் அலைகளில், முதியவரும் மிதந்தார்.

கவியரங்கம் முடிந்தது. தடியை ஊன்றிக்கொண்டே முதியவர் கூட்டத்தில் கரைந்து காணாமல் போய்விட்டார்.

அந்த முதியவர் வேறு யாருமல்ல. 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த்!!

நேரடியாக வந்தால் பரபரப்பு ஏற்படும் என்பதால், ரஜினிகாந்த் மாறுவேடத்தில் மின்னலாய் வந்து ரசித்துவிட்டுப் போனார்.

யாரும் அவரை அடையாளம் காண முடியவில்லை. அவரை அறிந்துகொண்டவர் ஒரே ஒரு அதிகாரி மட்டுமே.. அவரும் காட்டிக் கொடுக்கவில்லை!

ரஜினி மாறுவேடத்தில் வருவது இது முதல்முறையல்ல.. சென்னையில் சில குறிப்பிட்ட படங்களை மாறுவேடத்தில் போய் மக்களோடு மக்களாக அமர்ந்தே அவர் பார்த்திருக்கிறார். எம்எல்ஏ ஹாஸ்டல், சேப்பாக்கம் பகுதிகளிலும் மாறுவேடத்தில் போய் தன்னைப் பற்றிய விமர்சனங்களைக் கேட்டுள்ளார் என இயக்குநர் மணிவண்ணன் முன்பு கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
#18
[smg id=7484 type=full]

மணிரத்னத்தின் ராவணன் திரைப்படம் வரும் ஜூன் 18ம் தேதி உலகம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

மணிரத்னம் கடந்த இரு ஆண்டுகளாக தயாரித்து இயக்கி வரும் படம் ராவணன். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் வெளியாகிறது.

இந்தியில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்துள்ளனர்.

விக்ரம் முதல்முறையாக இந்தியில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்திக், பிருத்விராஜ் நடித்துள்ளனர்.

தெலுங்கில் இந்தப் படம் வில்லன் என்ற பெயரில் வெளியாகிறது.

ஏஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் ஏற்கெனவே பிரபலமடைந்துவிட்டன.

படம் வருகிற ஜூன் 18ம் தேதி உலகம் முழுக்க 1000க்கும் மேற்பட்ட பிரிண்டுகளோடு வெளியாகிறது. படத்தின் விளம்பரப் பணிகளில் மணிரத்னம் மும்முரமாக உள்ளார்.
#19
சென்னை: சிறந்த நடிகருக்கான செவாலியே சிவாஜி விருதை ரஜினியின் வீட்டுக்கே போய் வழங்கியது விஜய் டிவி.

சிறந்த சினிமா கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வரும் விஜய் டி.வி.யின் விருது விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இந்த விழாவில் கடந்த ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகைகள், மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

ரஜினிக்கு செவாலியே விருது

'செவாலியே சிவாஜி விருது'க்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ரஜினி இந்த விழாவுக்கு வரவில்லை. இதுவரை அவர் விஜய் டிவி விருது விழாவுக்கு வந்ததுமில்லை (கமல் 50 விழாவுக்கு மட்டும் வந்திருந்தார்). எனவே விருதை ரஜினியின் வீட்டுக்கே சென்று நடிகர் பிரபுவும், அவரது அண்ணன் ராம்குமாரும் வழங்கினார்கள்.

ஏற்கெனவே ஒருமுறை சிறந்த நடிகருக்கான விருதை, பொள்ளாச்சிக்கே போய் குசேலன் படப்பிடிப்பிலிருந்த ரஜினியிடம் கொடுத்தார்கள் விஜய் டிவிக்காரர்கள்.

சிறந்த மக்கள் அபிமான ஹீரோ விருது நடிகர் விஜய்க்கும், அபிமான நடிகை விருது அனுஷ்காவுக்கும் வழங்கப்பட்டது.

நாடோடிகள் நடிகை...

சிறந்த துணை நடிகைக்கான விருது நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை அபிநயாவுக்கு வழங்கப்பட்டது. இவர் வாய் பேசமுடியாதவர்.

மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாக மேடைக்கு வந்த அபிநயாவுக்கு நடிகர் நந்தா, ஷக்தி, நடிகை காம்னா ஆகியோர் விருதை வழங்கினார்கள். அப்போது அவர் ரசிகர்களை பார்த்து ஆனந்த கூச்சலிட்டார். தனக்கே உரிய பாஷையில் "என் அப்பா-அம்மாவுக்கு நன்றி'' என்றார். தொடர்ந்து தன்அப்பா, நாடோடிகள் படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் சசிகுமார் ஆகியோரையும் மேடைக்கு அழைத்தார்.

இயக்குநர் சமுத்திரக்கனியின் காலைத்தொட்டு வணங்கியவர், தனக்கு கிடைத்த விருதையும் அவர் கையில் கொடுத்து வாங்கினார். அப்போது ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள்.


இயக்குநர் சமுத்திரக்கனி பேசும்போது, "அபிநயா என் பிள்ளை மாதிரி. படத்தில் சசிகுமாரின் தங்கையாக வாய் பேசமுடியாத அபிநயாவை நடிக்க வைக்க நான் விரும்பியபோது, சசிகுமார் "இது முடியுமா?" என்று கேட்டார். முடியும் என்றேன். என் எதிர்பார்ப்புக்கும் மேலாக அபிநயா நடிப்பில் ஆச்சரியப்படுத்தினார்'' என்றார்.

தொடர்ந்து மற்ற கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகர் விருது காஞ்சீவரம் படத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்கும், சிறந்த நடிகை விருது 'நான் கடவுள்' படத்தில் நடித்த நடிகை பூஜாவுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை 'பசங்க' படத்தில் நடித்த விமல் பெற்றுக் கொண்டார். அவருக்கு கனிமொழி எம்.பியும், நடிகை குஷ்புவும் விருதை வழங்கினார்கள்.

சிறந்த புதுமுக நடிகை விருதை நாடோடிகள் படத்தில் நாயகியாக நடித்த அனன்யா பெற்றுக்கொண்டார். சிறந்த புதுமுக டைரக்டர் விருதை 'பசங்க' படத்தின் இயக்குனர் பாண்டிராஜுக்கு தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலினும், துரை தயாநிதியும் இணைந்து வழங்கினார்கள்.

சிறந்த வில்லனுக்கான விருது 'நான் கடவுள்' படத்தில் நடித்த ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நகைச்சுவை நடிகர் விருது 'சிவா மனசுல சக்தி' படத்தில் நடித்த சந்தானத்துக்கு கிடைத்தது.

விழாவில் செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி கலந்துகொண்டார்.
#21
[smg id=7471 type=full]

என்னால் நிறைய பேர் லாபம் அடைந்திருக்கிறார்கள். சிலர் நஷ்டம் அடைந்துள்ளனர். அவர்களில் ஆர்.எம். வீரப்பனும் ஒருவர் என்று நடிகர் ரஜினி கூறினார்.

1995ம் ஆண்டில் ரிலீசான ஆர்எம்.வீரப்பன் தயாரித்து ரஜினி நடித்த பாட்ஷா திரைப்படம் தமிழக அரசியலில் பெரும் திருப்பங்கள் ஏற்படுத்தியது.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் இந்தப் படத்தை தயாரித்தார். படம் மாபெரும் வெற்றி பெற்றது. வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியது. அதன் வெற்றி விழாவில் பங்கேற்று பேசிய ரஜினி, தமிழகத்தில் அப்போது நடந்த வெடிகுண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டு, மாநிலத்தில் வெடிகுண்டுக் கலாச்சாரம் பரவி வருவதாகக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து ஆர்.எம். வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.

அதன் பிறகு, ரஜினி அலை உருவானதும், அதன் தொடர்ச்சியாக நடந்த தேர்தலில் அந்த அலையை திமுக- தமாக கூட்டணி தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டதும் தமிழக அரசியல் சரித்திரத்தில் மறக்க முடியாத நிகழ்வுகள்.

இதையடுத்து நடந்த தேர்தல்களில் எல்லாம் ரஜினி வாய்ஸ் என்ன.. ரஜினி என்ன சொல்கிறார்.. யாரை ஆதரிக்கிறார்.. என்ற கேள்விகள் எழத் தொடங்கின.

அவரும் ஒவ்வொரு தேர்தலிலும் அப்போதையே சூழலுக்குத் தக்கவாறு யாருக்காவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு தெரிவித்து வந்தார்.

இந் நிலையில் சில 'அறிவுஜீவிகள்' அவரையே நேரடியாக அரசியலுக்கு இழுத்து வர முயன்றனர். காங்கிரஸ் பக்கம் கொண்டு போக சில தலைவர்களும் பாஜக பக்கம் இழுத்துச் செல்ல 'அறிவுஜீவிகளும்' முயன்றனர்.

ஆனால், இன்று வரை ரஜினி அந்த விஷயத்தில் 'கிரேட் எஸ்கேப்' ஆகி வருகிறார். இருந்தாலும் தேர்தல் வந்துவிட்டால் ரஜினியின் கருத்து என்ன என்று அவரை ஊடகங்கள் விரட்டுவதும், இந்தத் தேர்தலின்போது கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்று 'ரீல்' விடுவதும் தொடர்கிறது.

ரஜினியோ அந்த நேரங்களில் ஊரை விட்டே எங்காவது போய்விடுவதும் தொடர்ந்து வருகிறது.

இந் நிலையில் ஆர்.எம். வீரப்பனின் மகன் தங்கராஜ் திருமணம் சென்னையில் இன்று நடந்தது. முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்த இந்தத் திருமணத்தில் பங்கேற்ற ரஜினி பேசுகையில், பாட்ஷா பட பிரச்சனைகள் பற்றியும் குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:

ரொம்ப நாட்களுக்கு பிறகு இன்று முதல்வர் கலைஞரை ஒரே மேடையில் சந்திக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆர்.எம். வீரப்பன் எனது நீண்ட கால நண்பர். அவருக்கும் எனக்கும் உள்ள நட்பு ஆழமானது. அன்பானது.

என்னால் நிறைய பேர் லாபம் அடைந்திருக்கிறார்கள். சிலர் நஷ்டம் அடைந்துள்ளனர். அவர்களில் ஆர்.எம். வீரப்பனும் ஒருவர்.

பாட்ஷா படத்தால் உங்களுக்கு இப்படியொரு நிலைமை ஆகிவிட்டதே என்று கேட்டேன். அதற்கு அவர் இது காலத்தின் கட்டாயம் என்றார். ஆத்தீக வாதி என்றால் கடவுள் செய்தது என்பார்கள். இவர் நாத்தீக வாதியாக இருந்ததால், காலத்தின் கட்டாயம் என்றார்.

ஆர்.எம். வீரப்பன் நண்பராக மட்டுமின்றி வழி காட்டியாகவும் இருக்கிறார். என் மேல் மிகுந்த அன்பு வைத்துள்ளவர்.
பாட்ஷா படம் எனக்கு ரொம்ப பேர் வாங்கி கொடுத்தது. அதற்கு முக்கிய காரணம் ஆர்.எம். வீரப்பன். அந்த படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதில் அக்கறையும் ஈடுபாடும் காட்டினார். அவரது தயாரிப்பில் வந்த மூன்று முகம் படமும் அபாரமாக வெற்றி பெற்றது.

பாட்ஷா படம் மாதிரி மீண்டும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். அப்படி எடுத்தால் ஆர்.எம். வீரப்பன்தான் தயாரிக்க வேண்டும் என்றேன். அவரால் தான் அப்படி ஒரு படத்தை எடுக்க முடியும்.

எம்.ஜி. ஆருடன் எப்படி நட்புடன் இருந்தாரோ அதே போல் முதல்வர் கருணாநிதியிடமும் இப்போது இருக்கிறார் என்றார் ரஜினி.
#25
சென்னை: ப்ளஸ்டூ பொதுத் தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகின்றன. இத்தகவலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இப்போது திருத்தப்பட்ட விடைத்தாள்களின் மதிப்பெண் சரி பார்ப்புப் பணி நடைபெற்று வருவதாகவும் அடுத்த சில தினங்களில் அந்தப் பணி முடிந்ததும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு விடும் என்றும் அரசுத் தேர்வு இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்தன.

மாணவ, மாணவிகள் தங்களுடைய ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளையும், மதிப்பெண் நிலவரங்களையும் உடனுக்குடன் தட்ஸ்தமிழில் தெரிந்து கொள்ளலாம்.
#26
Chat Box / Happy Mothers Day
May 08, 2010, 03:44 PM
Happy Mothers Day
[smg id=7449 type=full]

Viyaabari - AasaPatta - DIVX
#27
This video came from a fellow who works for the RR as a train dispatcher.  Every once in a while he sends a  video involving trains.  This is one of them.

Trains nowadays mount cameras in their cabs, facing forward and backward, the same way police cars do. This video is a rearward camera. This is video of a train that ran through a tornado.
First there is the normal rearward view from the last of three engines, with the trees looking normal.  Then you begin to see rain, and then, halfway through the video the trees begin to sway violently. . . and then the "fun" begins.



http://www.youtube.com/watch?v=qWroYmLmKZQ&feature=player_embedded#!
#28
[smg id=7443 type=full]


வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பார்முலா 2 கார்  பந்தய பயிற்சியின் போது நடந்த பெரும் விபத்தில் சிக்கினார் அஜீத்.

இதில் சிக்கிய இரு டிரைவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அஜீத் எந்த காயமுமின்றி உயிர் தப்பினார்.

கார் பந்தய ட்ராக்கில் வேகமாக சென்று கொண்டிருந்த கார்களில் இரண்டு திடீரென முட்டிக் கொண்டன. இன்னொரு கார் உயரத்தில் பறக்க, பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதில் அடுத்தடுத்து வந்த கார்கள் முட்டிக் கொண்டன. மொத்தம் 5 கார்கள் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டன. இதில் அஜீத்தின் கார் கடைசியாக வந்ததால் தப்பித்தது.

இந்த விபத்தில் மூன்று கார்கள் நொறுங்கின. ஒரு கார் எரிந்தது. அஜீத் வந்த கார் நிலைகுலைந்தாலும், அஜீத்துக்கு எதுவும் ஆகவில்லை. தொடர்ந்து அவர் பயிற்சியில் ஈடுபட்டார்.

நேற்றைய பயிற்சிப் பந்தயங்கள் இரண்டிலுமே 13 வது இடம் பிடித்தார் அஜீத்.
#29
[smg id=7437 type=full]

இலங்கையில் நடக்கவிருக்கும் சர்வதேச இந்தியப் பட விழாவில் அமிதாப் குடும்பத்தினர் பங்கேற்க மாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அவர்களின் இந்த முடிவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி முக்கிய காரணம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்துக்கே பிள்ளையார் சுழி போட்டவர்கள் தமிழ் திரையுலகின் இரு பெரும் கலைஞர்களான ரஜினியும் கமலும்தான். இலங்கை த் தூதரகத்திலிருந்து அழைப்பிதழ் என்ற தகவல் தெரிந்ததுமே அதனை எடுத்த எடுப்பில் நிராகரித்தவர்கள் இவர்களே.

அதன் பின்னர்தான் மற்ற நடிகர்கள், கலைஞர்கள் இதனை விசேஷமாக நோக்கினர்.

இந்த உண்மை தெரிந்ததும் வைகோ, பழ நெடுமாறன், சீமான் உள்ளிட்டோர் ரஜினிக்கும் கமலுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், இந்த விவகாரத்தை பெரிதாக முன்னெடுத்தனர். சீமானின் நாம் தமிழர்  இயக்கம் மும்பையில் அமிதாப் வீடுகளை முற்றுகையிட, அவரும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்துப் பேசினார்.

விழா ஏற்பாட்டாளர்களையும் நாம் தமிழர் இயக்கத்தினருடன் பேச வைத்தார். தமிழர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் முடிவெடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த அமிதாப், தனது நெருங்கிய நண்பரான ரஜினியிடம் இதுகுறித்து விரிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் மீது தமிழ் ரசிகர்கள்  வைத்துள்ள மதிப்பு குறித்து ரஜினி எடுத்துக் கூறினாராம். குறிப்பாக ஐஸ்வர்யா ராய் இந்த நேரத்தில் கொழும்பு செல்வது எத்தகைய விளைவுகளை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்றும் விளக்கியுள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சினை, வன்னிப் போரின் போது இங்கு திரையுலகம் மேற்கொண்ட போராட்டங்கள் குறித்தும் ரஜினி கூறியதாகத் தெரிகிறது.

மேலும் மணிரத்னம் தரப்பிலும் ஐஸ்வர்யா ராய்க்கு பிரச்சினையின் தன்மையைப் புரிய வைத்துள்ளனர்.

இதன் விளைவாக அமிதாப் குடும்பத்தினர் கொழும்பு விழாவுக்கு செல்லாமல் புறக்கணிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்த விழாவில் சிறப்புக் காட்சியாக கொழும்பில் ராவணன் படத்தைத் திரையிட திட்டமிட்டிருந்த மணிரத்னம், இப்போது அதனை கைவிட்டுள்ளார். இலங்கை விழாவுக்கும் ராவணன் படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது!
#31
வழக்கமாக எந்த அரசு அலுவலகங்களிலும் பொது மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். பியூனில் ஆரம்பி்த்து அலுவகத்தின் உயர் அதிகாரி வரை ஏதோ ஜனாதிபதி மாதிரி தான் நடந்து கொள்வார்கள்.

அதிலும் மகா மட்டமான ஒரு துறை பாஸ்போர்ட் துறை.

இங்கு விண்ணப்பம் வாங்குவதில் ஆரம்பித்து அதை பூர்த்தி செய்து சமர்பிப்பது, டோக்கன் வாங்கிக் கொண்டு காத்திருப்பது, அவர்கள் கேட்கும் ஆவணங்களைக் காட்டி, கேள்விகளுக்கு பதில் தந்துவிட்டு வெளியே வரும் வரை தலைசுற்றிப் போகும்.

மேலே சொன்ன இந்த ஒரு பாரா விஷயம் நடந்து முடிய குறைந்தபட்சம் 4 நாட்களாவது ஆகும்.. உங்களுக்கு நேரம் நன்றாக இருந்தால். இல்லாவிட்டால், 6 மாதம் கூட ஆகிவிடும்.

அதேநேரத்தில் புரோக்கர்கள் மூலம் போனால் எல்லாம் ஈசியாக நடக்கும். இப்போது புரோக்கர்கள் தொல்லை பெருமளவு குறைந்துவிட்டாலும் பாஸ்போர்ட் அலுவலகங்களில் மக்களை நடத்தும் விதம் மாறவே இல்லை.

இந்த அலுவலகத்திற்குள் நுழையவே ஏகப்பட்ட கெடுபிடிகள் உண்டு. இவ்வாறு வரும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க எல்லா பாஸ்போர்ட் அலுவலகத்திலும் பிஆர்ஓ என்று ஒருவர் இருப்பார். ஆனால், அவர் அலுவலகத்துக்கு உள்ளே ஏசி ரூமில் உட்கார்ந்திருப்பார். இந்த அலுவலகத்துக்குள் நுழைவதே கஷ்டம் என்ற நிலையில் அவரை மக்கள் சந்தித்து எப்படி புகார் தர முடியும்?.

இதனால் இவர்களுக்கு வழக்கமாக எந்த வேலையும் இருப்பதில்லை. தினமும் அலுவலகம் வந்துபோய்விட்டு கத்தையாக சம்பளம் வாங்கும் அதிகாரிகள் தான் இந்த பிஆர்ஓக்கள். இவர்களது அதிகபட்ச வேலை, யாராவது உயர் அதிகாரி ஊருக்கு வந்தால் அவரை வரவேற்று பொகே கொடுப்பது, பிரஸ்மீட் நடத்துவது, வெளியுறவுத்துறை சார்பில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்தால் அதற்காக பத்திரிக்கைகளுக்கு இன்விடேசன் அனுப்புவதும், விழா நடக்கும்போது நிருபர்களுக்கு ஸ்னாக்ஸ் அரேஞ் செய்வது மட்டுமே.

இது போன்ற மட்டமான சர்வீசுக்கு சென்னை சாஸ்திரி பவனில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகமும் எந்தவிதத்திலும் விதிவிலக்கல்ல. அங்கு மக்களை மதிக்கவும் மாட்டார்கள், கேட்டால் பதிலும் சொல்ல மாட்டார்கள். வெளியுறவுத்துறையைச் சேர்ந்தவர்களாம்...அந்த பந்தாவுக்கு குறைச்சலே இருக்காது.

இங்கு ஊழியர்கள், அதிகாரிகளால் கேவலப்படுத்தப்பட்ட மக்கள் நேற்று பொறுமை இழந்து அலுவலகத்தையே அடித்து நொறுக்கினர்.

இந்த பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வருகிறார்கள். புதிதாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்களும், ஏற்கனவே பாஸ்போர்ட் வாங்கியவர்கள் புதுப்பிப்பதற்கும் தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வருவர்.

நேற்று அதிகாலை 3 மணியில் இருந்தே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் காத்துக் கிடந்தனர். கைக்குழந்தைகளுடன் பெண்கள்  கியூவில் நின்றனர். வயதான முதியவர்கள் கூட காத்திருந்தனர்.

இந் நிலையில் காலை 11 மணியளவில் பாஸ்போர்ட் அலுவலக கம்ப்யூட்டர்கள் பழுதாகிவிட்டதால் அலுவல் எதுவும் நடக்காது என்றும், மாலை 4 மணிக்கு மேல் தான் பணி நடக்கும் என்றும் பியூன்கள், பாதுகாவலர்கள் மூலம் சொல்லி அனுப்பினர் அதிகாரிகள்.

கிட்டத்தட்ட 6 மணி நேரம் தண்ணீர் கூட குடிக்காமல் காத்து கிடந்த மக்கள் கொதித்துப் போயினர். பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள் சிலர் ஆவேசமாக அலுவலகத்துக்குள் நுழைந்து கம்ப்யூட்டர்களை இழுத்து கீழே போட்டு உடைத்தனர்.

இதையடுத்து பாஸ்போர்ட் அதிகாரிகள் ஓடி ஒழிந்ததோடு நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தந்தனர்.

உதவி கமிஷனர் தலைமையில் விரைந்து வந்த போலீசார் மக்களை சமாதானப்படுத்தினர். ஆனால், போலீசாரோடு பொதுமக்கள் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த அலுவலகத்தில் பணம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கிறது என்றும், பணம் கொடுக்காவிட்டால் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லியோ, ஆவணங்களில் ஏதாவது குறையைச் சொல்லியோ நாட்கள் கணக்கில் அலையவிடுகிறார்கள் என்றும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

முதலில் பிஆர்ஓக்களை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெளியே ஒரு மேஜையைப் போட்டு மக்களோடு மக்களாக உட்கார வைத்தால் தான் மக்கள் தங்கள் குறைகளைச் சொல்லி அவற்றைத் தீர்த்துக் கொள்ள முடியும்.

உள்ளே இவர்களை சந்திக்கவே முடியாத தூரத்தில், பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு அந்தப் பக்கமாக ஏசி அறைகளில் உட்கார்ந்து கொண்டு பேப்பர் படிக்கும் இவர்களால் மக்கள் பணம் தான் வேஸ்ட்!
#32
[smg id=7428 type=full]

தமிழில் சுள்ளானும் சுண்டு விரலும் கூட சேர்ந்து நடிக்கமாட்டேன் என்று பிகு பண்ணுகிறார்கள். ஆனால் மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நான்கைந்து முன்னணி நடிகர்கள் எந்த ஈகோவும் இல்லாமல் நடிக்கிறார்கள்.

இப்போது அந்த நிலையை தமிழ்ப் பட உலகிலும் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார் தயாநிதி அழகிரி .

முதன்முதலாக தமிழில், 5 ஹீரோக்கள் நடிக்கும் படம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தயாநிதி. கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் வெங்கட் பிரபு.

இப்போது, புதுமுகங்களை வைத்து தூங்கா நகரம் என்ற படத்தை தயாரித்து வருகிறார் தயாநிதி. அடுத்து, லிங்குசாமி இயக்கத்தில், சிலம்பரசன் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்.

இதையடுத்து, வெங்கட்பிரபு இயக்கும் இந்த மெகா பட்ஜெட் படம் உருவாகிறது. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கி உள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் கூறியுள்ளார் தயாநிதி.

5 ஹீரோக்களிடமும் பேச்சு நடத்தி வரும் தயாநிதி, 'எந்த ஹீரோவும் எனக்கு பிரச்சினையில்லை. சுமூகமாக இந்தப் பட வேலைகள் நடக்கும்' என்கிறார்.
#33
[smg id=7427 type=full]

மும்பை: பெங்களூர்  சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பெங்களூரில் நடைபெறுவதாக இருந்த இரு அரை இறுதிப் போட்டிகளும், மும்பை க்கு மாற்றப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல்  போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஸ்டேடிய வளாகத்தில் இரண்டு சிறிய சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி போட்டி நடைபெற்றது.

இந்த நிலையில் பெங்களூரில் நடைபெறவிருந்த அரை இறுதிப் போட்டிகளை ஐபிஎல் நிர்வாகம் மும்பைக்கு மாற்றி விட்டது.

இதுகுறித்து ஐபிஎல் ஆணையர் லலித் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் குறைந்த சக்த வாய்ந்த குண்டுவெடிப்புதான் என்றாலும் கூட போட்டிகளை தொடர்ந்து நடத்துவது பாதுகாப்புக்கு உரியதாக இருக்காது என்று கருதுகிறோம். இதனால்தான் இரு அரை இறுதிப் போட்டிகளையும் நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானத்திற்கு மாற்றியுள்ளோம்.

உள்ளூர் காவல்துறை, ஐபிஎல் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தைகள், ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே கிரிக்கெட் வாரியத்தின் ராஜீவ் சுக்லா கூறுகையில், அரை இறுதிப் போட்டிகளுக்கான பாதுகாப்பை வழங்க பெங்களூர் காவல்துறை தயக்கம் காட்டியது. இதனால்தான் நாங்கள் போட்டியை மாற்ற வேண்டியதாயிற்று என்று கூறியுள்ளார்.
#34
கோவா படத்துக்காக கடன் பெற்றது தொடர்பாக ரஜினி மகள் சௌந்தர்யாவுக்கும், என்ஏபிசி நிறுவனத்துக்கும் இடையிலான பிரச்னையில் சமரசம் ஏற்பட்டதால் வழக்கு [^] சுமூகமாக தீர்க்கப்பட்டுவிட்டது.

நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், `கோவா' சினிமா படம் எடுப்பதற்காக கடன் வாங்கியது தொடர்பான வழக்கில் இருதரப்பினருக்கிடையே சமரசம் ஏற்பட்டதால் சென்னை [^] உயர்நீதிமன்றம் [^], வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

'கோவா' திரைப்படம் தயாரிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த என்ஏபிசி பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் மற்றும் வருண்மணியனிடம் ரூ.2 கோடியே 33 லட்சம் கடன் வாங்கினார்.

படம் வெளியாவதற்கு முன்னதாகவே பணத்தை திருப்பித் தருவதாக சௌந்தர்யா உறுதிமொழிப் பத்திரம் எழுதிக் கொடுத்தார்.

ஆனால் உறுதிமொழிக்கு மாறாக பணம் தருவதற்கு முன்பு `கோவா' படம் வெளிட திட்டமிடப்பட்டதால் வருண்மணியன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதன் பேரில் கோவா படம் வெளியாவதற்கு அப்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் சௌந்தர்யா தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு படத்துக்கான இடைக்காலத் தடை நீக்கப்பட்டது.

இதற்கிடையே, சௌந்தர்யா தரப்பில், ரூ.1 கோடியே 60 லட்சத்தை இந்தியன் வங்கி எல்டாம்ஸ் கிளை மூலமாகவும், ரூ.15 லட்சத்திற்கு காசோலை கொடுக்கவும், மீதமுள்ள ரூ.58 லட்சத்தை வரும் மே மாதம் 21ம் தேதிக்குள் கொடுப்பதாகவும் ஒப்புதல் அளித்தனர்.

இதனை என்ஏபிசி நிறுவனமும் ஏற்றுக் கொண்டது. அதேநேரத்தில் இதுதொடர்பாக எந்த வழக்கும் தொடர்வதில்லை என்றும், சௌந்தர்யா ரஜினிகாந்த் பற்றி பேட்டி கொடுப்பதில்லை என்றும் என்ஏபிசி நிறுவனம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து இருதரப்பினர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஆஜராகி, இருதரப்பு சமரசத்தையும் ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பெரிய கருப்பையா வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.


source : thatstamil
#35
[smg id=7403 type=full]

Sundar C-starrers Vaada and Guru Sishyan are to be released on April 16th. While Vaada is directed by A Venkatesh, Shakthi Chidambaram has wielded the megaphone for Guru SIshyan. Guru Sishyan also stars Sathyaraj and has Hemamalini as the heroine. Dheena has scored music for this film and it is produced by Radha Shakthi Chidambaram.

Interestingly, A Venkatesh's another venture, Maanja Velu, will also hit the screens on the same day. Arun Vijay plays the lead role in film.

There seems to be rush to release the films on April 16th, as we hear Vijay's Sura will hit the marquee the week next.
#36
[smg id=7395 type=full]


சென்னை : சென்னை  நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியேறினர்.

சென்னையில் நேற்று இரவு நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், கொட்டிவாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் 10.30 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இரவு நேரம் என்பதால் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் உள்ளிட்டவை அசைந்ததாக பூகம்பத்தை உணர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

அந்தமான் தீவுப் பகுதியில் நேற்று இரவு பத்தரை மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவே சென்னையிலும் பூகம்பத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். அந்தமான் பூகம்பத்தின் அளவு 6.9 ரிக்டராக தெரிய வந்துள்ளது.

சென்னையில் உணரப்பட்ட பூகம்பம் வெறும் 3 விநாடிகள்தான் நீடித்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்திலும் பூகம்பத்தை உணர்ந்துள்ளனர். சென்னை நகரின் பல பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டாலும் கூட இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை.

சென்னையைப் போலவே புவனேஸ்வர், கட்டாக் ஆகிய நகரங்களிலும் நில அதிர்ச்சியை மக்கள் உணர்ந்துள்ளனர். இங்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனால் அந்தமானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்திற்கு பல வீடுகள் சேதமடைந்துள்ளனவாம். 2 பேர் காயமடைந்துள்ளனர். வேரு பெரிய சேதம் எதுவும் இல்லை. கடலில் பூமி அதிர்ச்சியின் மையம் இருந்தாலும் கூட சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
#38
[smg id=7393 type=full]


வருமா வராதா என்று ரஜினி ரசிகர்களே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த சௌந்தர்யா ரஜினியின் சுல்தான் தி வாரியர் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

எந்திரன் படப்பிடிப்பை முடித்துவிட்ட ரஜினி, இப்போது மகளின் படத்தை முடிப்பதற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

சுல்தான் தி வாரியர் படத்தில், அனிமேஷன் ரஜினி தவிர்த்து, இன்னொரு ரஜினியும் வருகிறார். அது நிஜ ரஜினி. குறிப்பிட்ட சில காட்சிகளில் அனிமேஷன் ரஜினியுடன் நிஜ ரஜினியும் வருவதுபோல படமாக்கியுள்ளாராம் சௌந்தர்யா.

இந்த அசல் ரஜினி காட்சிகள் மட்டும் படத்தில் 20 நிமிடங்கள் இடம் பெறுகின்றனவாம்.

இந்த இரண்டு ரஜினி தவிர, இன்னொரு ரஜினியும் படத்தில் இடம் பெறுவதாக சௌந்தர்யா தெரவித்துள்ளார்.

"இந்த மூன்றாவது ரஜினி கேரக்டர் படத்தின் முக்கியமான சஸ்பென்ஸாக இருக்கும். முக்கியமான இன்னொரு விஷயம்... சுல்தான் தி வாரியர் எந்திரனுக்குப் பிறகுதான் ரிலீஸ். அதில் எந்த மாற்றமும் இல்லை..." என்கிறார் சௌந்தர்யா.

இதற்கிடையே, சுல்தான் விவகாரத்தில் கோர்ட்டுக்குப் போவதாக அறிவித்த ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி, கோர்ட்டுக்கு வெளியே விவகாரத்தை லதா ரஜினி முடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

சுல்தான் படத்தைத் தயாரிக்கும் ஆக்கர் ஸ்டுடியோ தலைவர் லதா ரஜினிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
#40
[smg id=7324 type=full]


மூச்சுத் திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு இன்று இதய அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகர்களில், மிக பிரபலமானவர் கவுண்டமணி. நகைச்சுவை நடிப்பில், தனி முத்திரை பதித்தவர். 73 வயதான அவருக்கு, சர்க்கரை நோய் இருந்து வந்தது.

ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தபோது, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். பல பெரிய பட வாய்ப்புகளைக் கூட மறுத்துவிட்டார். நீண்ட இடைவெளிக்குப்பின், சரத்குமார் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ஜக்குபாய் படத்தில் நடித்திருந்தார்.

கவுண்டமணிக்கு கடந்த சில நாட்களாக தோள் பட்டையிலும், கழுத்திலும் வலி இருந்து வந்தது. இதற்காக அவர் கழுத்து பட்டை அணிந்து இருந்தார். கடந்த 15ம் தேதி அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கவுண்டமணிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதற்காக, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

நேற்று அவருக்கு முழு உடல் பரிசோதனை நடந்தது. அதைத்தொடர்ந்து கவுண்டமணிக்கு இதய அறுவை சிகிச்சை நடத்த டாக்டர்கள் முடிவு செய்தார்கள். அதன்படி அவருக்கு, இன்று (வெள்ளிக்கிழமை) ஆபரேஷன் நடக்கிறது.
#41
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் கேப்டன் டிவி தனது சோதனை ஒளிபரப்பை கடந்த 15ம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறது.

விஜயகாத்தின் மைத்துனர் எல்.கே.சுதிஷ் நிர்வாகத்தில், சித்திரைத் திருநாளான ஏப்ரல் 14ம் தேதி 24 மணி நேர நிகழ்ச்சிகள் முழு வீச்சில் ஒளிபரப்பாக உள்ளன.

தற்போது சோதனை ஓட்டமாக சினிமா பாடல்கள், கட்சி விளம்பரஙகள் போன்றவற்றை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.

ஏப்ரல் 14ம் தேதிக்கு முதல் வார நாட்களில் தொடர்கள், திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகலில் திரைப்படங்கள், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பிறமொழிப் படங்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.

சன் மற்றும் கலைஞர் டிவிக்களுக்கு போட்டியாக பல புதிய படங்களை மடக்க இப்போதே முன்னணி சினிமா நட்சத்திரங்களுடன் 'கேப்டன் டீம்' பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறதாம்.

'நான்காவது தூணில் மூன்றாவது கண்!- உள்ளது உள்ளபடி இனி கேப்டன் செய்திகளில் மட்டுமே!' என்ற 'பஞ்ச்' வாசகங்களுடன் கேப்டன் டிவி தனது ஒளிபரப்பை சோதனை ஓட்டத்தை தொடங்கியுள்ளது.
#42
[smg id=7297 type=full]

சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கிறார் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

ரூ 11.59 கோடியைத் திருப்பித் தருமாறு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும் சவுந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோவும் இணைந்து ரஜினியின் முதல் அனிமேஷன் படமான சுல்தான் தி வாரியரை தயாரிக்க திட்டமிட்டது.

2008-ல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. 2009- ஏப்ரலில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படம் இதுவரை வெளிவரவில்லை. தாமதமாவது தொடர்ந்ததால் ஒப்பந்தத்தை முறித்து, படத்திலிருந்து விலகிக் கொண்டது ரிலையன்ஸ்.

இப்போது சுல்தான் படத்தை வரும் ஜூன் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் சவுந்தர்யா. இதனை அறிந்த ரிலையன்ஸ் உடனடியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

அதில் பழைய பாக்கியை முடிக்காமல் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்றும், உடனடியாக தங்களின் ரூ 11.59 கோடியை 12 சதவிகித வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இதுபற்றி ஆக்கர் ஸ்டுடியோ நிறுவனத் தலைவர் லதா ரஜினியிடம் கேட்ட போது, 'வழக்கெல்லாம் ஏதுமில்லை. பேச்சுவார்த்தை நடக்கிறது. அனைத்தும் சுமூகமாக முடிந்துவிடும்' என்றார்.

இந்நிலையில் வரும் மார்ச் 29-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருவதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
#43
ஹைதராபாத்: தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதால் ஹைதராபாத்தில் பெரும் பதட்டம் காணப்படுகிறது.

அவரது பெயர் சாய்குமார். பி.டெக் படித்து வந்தார். இன்று காலை அவர் தனது விடுதி அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அறைக்குத் திரும்பிய மாணவர்கள் சாய்குமார் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.

சாய்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் தெலுங்கானாவுக்காக தனது உயிரைத் தியாகம் செய்வதாக கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்க வளாகத்தில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.


source:thatstamil
#44
2009-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்துக்கு மூன்று விருதுகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் கேமரூனின் முன்னாள் மனைவி கேதரின் பிக்லோ இயக்கிய, தோல்விப் படம் என்று அறிவிக்கப்பட்ட தி ஹர்ட் லாக்கர் சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட 6 விருதுகளை தட்டிக் கொண்டு போய் விட்டது.

அவதார் திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அதில், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான விருதுகள் மட்டுமே அவதாருக்கு கிடைத்தன.

சிறந்த நடிகருக்கான விருது க்ரேஸி ஹார்ட் படத்தின் நாயகன் ஜெஃப் பிரிட்ஜஸுக்குக் கிடைத்தது.

சிறந்த நடிகைக்கான விருது தி ப்ளைண்ட் சைட் பட நாயகி சான்ட்ரா புல்லக்குக்கு வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகைக்கான விருது நோ நிக்கிக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது கிறிஸ்டோபர் வால்ட்ஸுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படத்துக்கான விருதுகள் அவதாருக்கே கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவை தி ஹர்ட் லாக்கருக்கு கிடைத்தது பார்வையாளர்களை அதிர வைத்தது. ஜேம்ஸ் கேமரூன் முகத்தில் அந்த ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது!

2009- ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் விவரம்:

சிறந்த நடிகர்: ஜெப் பிரிட்ஜஸ், படம்: க்ரேஸி ஹார்ட்

சிறந்த நடிகை: சான்ட்ரா புல்லக், படம்: தி ப்ளைண்ட் சைட்

சிறந்த படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த இயக்கம்: கேதரின் பிக்லோ, படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த துணை நடிகர் - கிறிஸ்டோபர் வால்ட்ஸ். படம்: இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்

சிறந்த துணை நடிகை - மோ நிக்கி, படம்: பிரிஸியர்

சிறந்த அனிமேஷன் படம்: அப்

சிறந்த கலை இயக்கம்: ரிக் கார்ட்ர், ராபர்ட் ஸ்ட்ராம்பர்க் (கலை இயக்கம்), கிம் சின்க்ளேர் (செட் அலங்காரம்), படம்: அவதார்

சிறந்த ஒளிப்பதிவு: மோரோ பியரோ, படம்: அவதார்

சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ்: ஜோ லெட்டரி, ஸ்டீபன் ரோஸன்பாம், ரிச்சர்ட் பென்ஹேம் மற்றும் ஆண்ட்ரூ ஆர் ஜோன்ஸ், படம்: அவதார்

சிறந்த டிசைனிங்: சாண்டி பாவல், படம்: தி யங் விக்டோரியா

சிறந்த டாகுமெண்டரி படம்: தி கோவ் (லூயி ஸியோஸ் மற்றும் பிஷர் ஸ்டீவன்ஸ்)

சிறந்த டாகுமெண்டரி (குறும்படம்): மியூசிக் பை ப்ரூடென்ஸ் (ரோஜர் ரோஸ் வில்லியம்ஸ் மற்றும் எலினார் பர்கெட்)

சிறந்த எடிட்டிங்: பாப் முராவ்ஸ்கி - கிறிஸ் இன்னிஸ், படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த வெளிநாட்டு மொழிப் படம்: தி ஸீக்ரெட் இன் தேர் ஐஸ் (El Secreto de Sus Ojos), அர்ஜன்டைனா, இயக்கம்: ஜான் ஜோஸ் காம்பெனல்லா

சிறந்த மேக்கப்: பார்னி பர்மன், மின்டி ஹால் மற்றும் ஜோயல் ஹர்லோ

சிறந்த இசை: மைக்கேல் ஜியாசினோ, படம்: அப்

சிறந்த இசை (ஒரிஜினல் ஸ்கோர்): இசை - பாடல்: ரையன் பிங்காம் மற்றும் டி போன் பர்னட், படம்: க்ரேஸி ஹார்ட்

சிறந்த சவுண்ட் எடிட்டிங்: பால் என்ஜோ ஒட்டோசன், படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த சவுண்ட் மிக்ஸிங்: பால் என்ஜோ ஒட்டோசன் - ரே பெக்கட், படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த ஒரிஜினல் ஸ்க்ரிப்ட்: தி ஹர்ட் லாக்கர், பால் என்ஜே ஓட்டோசன்

சிறந்த குறும்படம்: தி நியூ டெனன்ட்ஸ், இயக்கியவர்: ஜோக்கிம் பேக் - டிவி மேக்னஸ்ஸன்

சிறந்த அனிமேஷன் குறும்படம்: லோகரோமா, இயக்கம்: நிகோலஸ் ஷ்மெர்கின்.


Source: thatstamil
#45
[smg id=7282 type=full]


விண்ணைத் தாண்டி வருவாயா படம் ரஜினிக்காக சிறப்புக் காட்சி போட்டிருக்கிறார்கள். படம் பார்த்த ரஜினி, படக்குழுவினர், நடிகர் நடிகைகள் எல்லோராயும் வாயார வாழ்த்தியுள்ளார்.

பின்னர் மறக்காமல் கேட்டது படத்தில் 'காக்க காக்க கேமராமேன்' பாத்திரத்தில் வரும் கணேஷை. 'எங்கே அந்த காக்க காக்க கேமராமேன்... கூப்பிடுங்க அவரை..." என்றாராம். உண்மையில் காக்க காக்க படத்துக்கு கேமராமேன் ஆர்டி ராஜசேகர். விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்காக கணேஷுக்கு அப்படி ஒரு வேடம் கொடுத்ததை ரஜினிக்கு சொல்ல, 'அட... பிரமாதம்பா... நிஜமான கேமராமேனே இவர்தான்னு நினைச்சிட்டேன். ஃபெண்டாஸ்டிக்.." என்று வாயாற பாராட்டினாராம்!

இதுபற்றி இயக்குநர் கவுதம் மேனன் கூறுகையில், "கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்தப் படத்தைப் பற்றி பாராட்டிப் பேசினார் ரஜினி சார். அவரது பெரிய மனதைக் காட்டியது அது. ரொம்ப நாளைக்குப் பிறகு உணர்வுப்பூர்வமா ஒரு படம் பார்த்தேன்னார்... இப்போ எனக்கே என் படம் மீது புதிய மரியாதை பிறந்திருக்கிறது. நிச்சயமா விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ள குறைகளை அடுத்த படத்தில் திருத்திக் கொள்வேன்" என்றார்.
#46
Chat Box / Guess who is this ???
Mar 05, 2010, 10:56 AM
[smg id=7275 type=full]
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-


Surya  And  Karthik
#47
சென்னை: சினிமாவில் பயன்படுத்தப்படும் டம்மி குண்டு வெடித்ததில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. கணவன் - மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னையில் நேற்று இந்த சம்பவம் நடந்தது.

மேற்கு மாம்பலம் காந்தி வீதியைச் சேர்ந்த ரவி (வயது 42), சினிமா வட்டாரத்தில் பிரபலமானவர். இவரை பாம் ரவி என்றுதான் அழைப்பார்கள். சினிமா படப்பிடிப்புக்கு டம்மி வெடிகுண்டுகள் செய்வது இவர் தொழில்.

மனைவி ரத்னாவுடன் வசித்த இவர் தனது வீட்டிலேயே ஏராளமான டம்மி வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தாராம்.

நேற்று இரவு 8 மணியளவில் பதுக்கி வைத்திருந்த டம்மி வெடிகுண்டுகள் திடீரென்று வெடித்தன. இதில் ரவியும் அவரது மனைவி ரத்னாவும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் வசித்து வந்த வீடு இடிந்து தரைமட்டமானது.

அவர்களது வீட்டையொட்டி இருந்த ஒரு கடையும் நொறுங்கியது. ரவி வசித்து வந்த வீட்டின் மேல் மாடியும் பக்கத்தில் இருந்த இன்னொரு வீடும் இடிந்து தரைமட்டமானது. மொத்தம் 3 வீடுகளும், ஒரு கடையும் முற்றாக இடிந்து விழுந்தன.

அதோடு அந்த காம்பவுண்டில் உள்ள மேலும் 10-க்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்தன. குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் மேற்கு மாம்பலம் காந்தி வீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குண்டு வெடிப்பில் காயமடைந்த ரவியும், அவரது மனைவி ரத்னாவும் உடனடியாக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் உயிருக்கு போராடியதால் பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அக்கம் பக்கத்து வீடுகளில் வசித்த லோகேஷ், மகேஷ் , பாலாஜி , பத்மபிரியா  ஆகியோரும் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்தனர். லைசென்ஸ் இல்லாமல் டம்மி குண்டுகளை ரவி வைத்திருந்தது தெரிய வந்தது.

வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தாரிடமும் விசாரித்து வருகிறார்கள்.

சம்பவ இடத்தை சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், தியாகராயநகர் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன் ஆகியோரும் பார்வையிட்டனர்.
#48
[smg id=7273 type=full]

விண்ணைத் தாண்டி வருவாயா படம் தெலுங்கிலும் கடந்த வெள்ளிக் கிழமையன்றே ரிலீஸானது 'ஏ மாயா சேஸவே' என்ற தலைப்பில்.

இந்தப் படத்தில் நாக சைதன்யாவும் சமந்தாவும் நடித்திருந்தனர் தமிழில் இந்த ஜோடி கெஸ்ட் ரோல் பண்ணியிருந்தது கிளைமாக்ஸில். இதேபோல தெலுங்கு கிளைமாக்ஸில் சிம்பு - த்ரிஷா சிறப்பு காட்சியில் தோன்றுவார்கள்.

தமிழுக்கு எதிர்மறையான முடிவையும், தெலுங்குக்கு பாஸிடிவ் கிளைமாக்ஸையும் வைத்திருந்தார் கவுதம் மேனன்.

முதலில் இதற்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் ஆட்சேபணை சொல்லப்பட்டதாம். ஆனாலும் தைரியமாக ரிலீஸ் செய்யுங்கள் என்று கவுதம் மேனன் சொல்லிவிட்டதால் அப்படியே வெளியிட்டனர்.

'தெலுங்கில் படம் பெரிய வெற்றி  என்று ரிசல்ட் வந்துள்ளதாம். சிம்பு நடித்த படங்களில் இதுவரை எந்தப் படத்துக்கும் கிடைக்காத வரவேற்பு இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளது' என்கிறார் தயாரிப்பாளர்களில் ஒருவரான கணேஷ்.

இந்த வெற்றி, அடுத்தடுத்த படங்களிலும் வித்தியாசமான க்ளைமாக்ஸ் முயற்சிக்கு தூண்டுதலாக உள்ளது என்கிறார் கவுதம் மேனன்.

விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்குப் பதிப்பு சென்னையிலும் வெளியாகியுள்ளது.
#49
அஜீத் - கவுதம் மேனன் கூட்டணி உருவாக்கும் படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அஜீத் நடித்த அசல் படம் சமீபத்தில் வெளியாகி, ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜீத் [^] பேசிய விவகாரம் பெரும் பிரச்சினையானது.

இதனால் தனது 50வது படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தார் அஜீத். இப்போது பிரச்சினைக்கு முதல்வரே முற்றுப்புள்ளி வைத்துவிட்டதால், தனது 50 வது பட வேலைகளில் பிஸியாகியுள்ளார் அஜீத்.

இந்தப் படத்தை முதல்வர் கருணாநிதியின் பேரனும் மத்திய அமைச்சர் அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். கவுதம் வாசுதேவ மேனன் இயக்குகிறார். ஏஆர் ரஹ்மான் இசையமைப்பார் என்று தெரிகிறது.

படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என தலைப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக உள்ளது.

இந்தச் செய்தியை உங்களுக்கு முதலில் தெரிவிப்பது ITACUMENS.
#50
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்டூ தேர்வுகள் தொடங்குகின்றன. இதை கிட்டத்தட்ட ஏழரை லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

தேர்வின்போது முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புத்தகங்களை மூடி வைத்து விட்டு, கடந்த ஒரு வருடமாக படித்து வந்த பாடங்களை மனதில் நிறுத்தி, கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டத்திற்கு பிளஸ்டூ மாணவ, மாணவியர் வந்துள்ளனர். இன்று முதல் பிளஸ்டூ தேர்வுகள் தமிழகத்தில் தொடங்குகின்றன.

அறிவியல் புல மாணவர்களுக்கு கடைசித் தேர்வு மார்ச் 19ம் தேதி (தாவரவியல்) முடிகிறது. மார்ச் 22ம் தேதி வணிகவியலுடன் பிளஸ்டூ பொதுத் தேர்வுகள் முடிவுக்கு வருகின்றன. முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெறுகிறது.

பிளஸ்டூ தேர்வை இந்த ஆண்டு 7,53,000 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். பள்ளிகள் மூலம் 6 லட்சத்து 93 ஆயிரம் பேர்களும், தனித்தேர்வர்களாக 60 ஆயிரம் பேர்களும் எழுதுகிறார்கள். தேர்வுக்காக 1,800 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் 30 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு 11,000 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வின்போது பிட் அடிப்பது, காப்பி அடிப்பது, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல தேர்வுக் கண்காணிப்பாளர்களும் செல்போன்களைப் பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். பத்து மணி முதல் 15 நிமிடங்களுக்கு கேள்வித்தாளை வாசித்துப் பார்க்க அவகாசம் தரப்படுகிறது.

பிளஸ்-2 தேர்வைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி. மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 23-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ந் தேதி வரை நடைபெறுகின்றன.

அதேபோல, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 3-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி முடிவடைகிறது.

இதேபோல, 10-வது வகுப்பு தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி மார்ச் 31-ந் தேதி முடிகிறது.

பிளஸ் டூ தேர்வு அட்டவணை...

2010 மார்ச் 1 - தமிழ் முதல் தாள்.

2 - தமிழ் இரண்டாம் தாள்.

4 - ஆங்கிலம் முதல் தாள்.

5 - ஆங்கிலம் இரண்டாம் தாள்.

8 - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்

11 - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து.

13 - அனைத்து தொழில்கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (ஜெனரல்), புள்ளியியல்.

15 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசியன் அன்ட் டயட்டிக்ஸ்

17 - தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம்.

19 - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்.

22 - வணிகவியல், மனையியல், புவியியல்.