கைதான அஜ்மல் அமீரை தூக்கில் போட வேண்டும்

Started by OmMuruga, Jan 12, 2009, 11:26 PM

Previous topic - Next topic

OmMuruga

மும்பை : மும்பையில் கடந்த நவம்பரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மும்பையைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் துக்காராம் ஓம்பலும் பலியானார். இவரது மகள் வைஷாலி, சிவசேனாவின் "சாம்னா' பத்திரிகைக்கு அளித்த பேட்டி: மும்பையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் அமீர் இமான் மட்டுமே கைது செய்யப் பட்டுள்ளான். பயங்கரவாதிகள் 200க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை துடிக்க, துடிக்க படுகொலை செய்துள்ளனர். அஜ்மலை தண்டிக்காமல் விட்டுவிட்டால், அது பயங்கரவாதிகளை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். எனவே, அஜ்மல் அமீர் இமானை "கேட்வே ஆப் இந்தியா' முன் தூக்கில் போட வேண்டும் என்றார்.  :acumen