திருப்பத்தூர் அருகே விபத்து: கல்லூரி மாணī

Started by Kalyan, Oct 24, 2008, 09:30 PM

Previous topic - Next topic

Kalyan

திருப்பத்தூர் அருகே விபத்து: கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் ப‌லி!!!

சிவக‌ங்கை மாவ‌ட்ட‌‌ம் ‌திரு‌ப்ப‌த்தூ‌ர் அருகே இருச‌க்கர வாகன‌த்த‌ி‌ல் பேரு‌ந்து மோ‌தி ‌விப‌த்து‌‌க்கு‌ள்ளான‌தி‌ல், 2 க‌ல்லூ‌ரி மாண‌வி‌க‌ள் உ‌ள்பட 3 பே‌ர் ‌நி‌‌க‌ழ்‌வி‌ட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள்.

திருப்பத்தூர் அருகே உள்ள எஸ்.வி.மங்கலத்தைச் சேர்ந்த கயல்விழியு‌ம், அதே பகுதியை சேர்ந்த ஆத்மாம்பாளு‌ம், தேவகோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி படித்து வ‌ந்தன‌ர்.

அ‌ந்த பகு‌தி‌யி‌ல் தொடர்ந்து பெய்த மழையா‌ல் சாலைக‌ள் கடுமையாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் பேரு‌ந்து போ‌க்குவர‌த்து முழுவதுமாக து‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டது.

இதனா‌ல் அவ‌ர்கள் இருவரும் இ‌ன்று அதே ஊரைச் சேர்ந்த ராஜு என்பவருடன் இருச‌க்கர வாக‌ன‌த்‌தி‌ல் க‌ல்லூ‌ரி‌க்கு செ‌ன்று கொ‌ண்டிரு‌‌ந்தன‌ர்.

திருப்பத்தூர் அருகே சென்றபோது எதிரே வந்த பேரு‌ந்து ஒ‌ன்று இருச‌க்கர வாகன‌த்த‌ி‌ல் பய‌ங்கரமாக மோதியது. இதில் 3 பேரு‌ம் ‌நி‌க‌ழ்‌விட‌த்‌திலேயே உ‌‌யி‌ரிழ‌ந்தன‌ர்.

இந்த விபத்து குறித்து திருப்பத்தூர் காவ‌ல்துறை‌யின‌ர் வழக்கு‌ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி‌ன்றன‌ர்.